Presenter: Smt. Mahalakshmi Senthilkumar (Parasakthi Family Member)
கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
சென்னியது, உன் பொற் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம்,சிந்துர வண்ணப் பெண்ணே! முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
Senniyadhu, Un por Thiruvadith ThAmarai ! Sindhaiyulle Manniyadhu, Un ThiruMandhiram; Sindhura Vannappenne! MunniyaNin AdiyArudan Koodi, Murai Muraiye Panniyadhu, Enrum Undhan ParamAgama Patthadhiye.
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும் தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக் கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
AnandhamAi, En ARivAi, Niraindha AmudhamumAi, VAn AndhamAna VadivudaiyAl, Marai NAnginukkum ThAn AndhamAna, CharanAravindhamThavala nirak KAnam Tham AdarangAm EmpirAn Mudik Kanniyadhe.
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே.
Kanniyadhu Un Pugazh, Karppadhu Un NAmam, Kasindhu Bhakthi Panniyadhu Un Iru Paadhaampuyaththil, Pagal IravA Nanniyadhu Unnai Nayandhor Avaiyatthu-NAn Mun Seidha Punniyam Ethu? En Amme! Puvi Ezhaiyum pootthavale!
பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார், மதி வானவர் தம் விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ? பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி பதி ஜயமானது அபஜயம் ஆக, முன் பார்த்தவர் தம் மதி ஜயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே.
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பறுக்க, முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.
Pinne Thirindhu, Un AdiyAraip Peni, Pirapparukka, Munne Thavangal Muyandru Konden, Mudhal Moovarukkum Anne! Ulagukku Abiraami Ennum Arumarundhe! Enne? Ini Unnai YAn MaravAmal Nindru Etthuvane.
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே வீழினும், கரையேற்றுகை நின் திருவுள்ளமே! ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
Andre Thadutthu Ennai AnduKondAi, Kondadhalla EnKai Nandre Unakku? Ini NAn En Seyyinum Nadukkadalul Sendre Veezhinum, Karaiyettrugai Nin Thiruvullame! Ondre Pala Uruve, Aruve, En Umaiyavale.
உமையும் உமையொரு பாக௫ம், ஏக உருவில் வந்து, இங்கு எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
Umaiyum Umaiyoru Paagarum, Ega Uruvil Vandhu, Ingu Emaiyum Thamakku Anbu SeyyavaitthAr, Ini Ennudharkku Samaiyangalum Illai, EendreduppAl Oru ThAyum Illai, Amaiyum Amaiyuru Tholiyar Mel Vaittha Aasaiyume.
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
Aasaik Kadalil Agappattu, Arulattra Andhagan Kaip PAsatthil Allalpada Irundhenai, Nin PAdham Enum VAsak Kamalam Thalaimel Valiya Vaitthu, Aandu Konda Nesatthai En Solluven? Easar PAgatthu Nerizhaiye.
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய்.அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்- தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட்பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
Thinkat Pagavin Manam NArum Seeradi Senni Vaikka Enkatku Oru Thavam EydhiyavA, EN Irandha Vinnor- Thankatkum Indhath Thavam Eydhumo? Tharangak Kadalul Venkat Pani Anaimel Thuyilkoorum Vizhupporule.
பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் அருளே, அருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் அருள் ஏது அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
Porule, Porul Mudikkum Bogame, Arum Bogam Seyyum Arule, Arulil Varum Therule, En Manatthu Vanjatthu Iruledhum Inri Oli Veli Aagi Irukkum Undhan Arul Edhu- Arigindrilen, AmbuyAdhanatthu Ambikaiye.
புண்ணியம் செய்தனமே-மனமே, புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
Punniyam Seidhaname-Maname, Pudhup Poonkuvalaik Kanniyum Seyya Kanavarum Koodi, Nam KAranatthAl Nanni Inge Vandhu Tham AdiyArgal Nadu Irukkap Panni, Nam Senniyin Mel Padhma PAdham Padhitthidave.
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், இவளே கடவுளர் யாவ௫க்கும் மேலை இறைவியுமாம், துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம் ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்- நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி ௨டையாள் சரணம்-அரண் நமக்கே.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர் தங்கள், முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே! சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார், மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை, பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு செய்யும் தவம் உடையார்க்கு, உளவாகிய சின்னங்களே.
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பாற்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
தஞ்சம் பிறிதில்லை, ஈதல்லதென்று உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும், இக்கலராக நின்றாய், அறியார் எனினும், பஞ்சஞ்சும் மெல்லடியார், அடியார் பெற்ற பாலரையே.
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறுபெற்றேன்? தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.
தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் கூறும்பொருள், குன்றில்கொட்டும் தறி, குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய், இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம் கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தோறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.
Thotthiram Seidhu Thozhudhu, Min Polum Nin Thottram, Oru MAtthiraip Podhum Manadhil VaiyAdhavar, Vanmai Kulam, Gotthiram, Kalvi, Gunam Kundri, NAlum Kudilgal Thorum PAtthiram Kondu Balikku UzhalAnirpar-PAr Engume.
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன், இனி யான் பிறக்கின், நின்குறையே அன்றி யார் குறை காண், இரு நீள்விசும்பின், மின்குறை காட்டி, மெலிகின்ற நேரிடை மெல்லியலாய், தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.
En Kurai Theera Nindru Ettrugindren, Ini YAn Pirakkin, Nin Kuraiye Andri YAr Kurai KAn,Iru Neel Visumbin Minkurai KAtti Meligindra Neridai MelliyalAi Thann Kurai Theera, Engon Sadai Mel Vaittha ThAmaraiye.
தாமம் கடம்பு, படைபஞ்சபாணம்;, தனுக்கரும்பு, யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பக்தருக்குள், தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது, தரியலர் தம் புரம் அன்று, எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம் ஒன்று, செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே.
வருந்தா வகை என் மனத்தாமரையினில், வந்துபுதுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனிஎனக்குப் பொருந்தாது, ஒருபொருள் இல்லை, விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
VarundhAvagai, En ManatthAmaraiyinil Vandhu Pugundhu IrundhAl,Pazhaiya IruppidamAga, Ini Enakkup PorundhAdhu Oru Porul Illai, Vinn Mevum Pulavarukku VirundhAga Velai MarundhAnadhai Nalgum Melliyale.
நகையே இத்திந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, முகையே முகிழ்முலை, மானே முதுகண், முடிவில் அந்த வகையே, பிறவியும் வம்பே மலைமகள் என்பது, நாம் மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம், அன்றே உனதென்று அளித்து விட்டேன், அழியாத குணக் குன்றே! அருள்கடலே! இமவான் பெற்ற கோமளமே.
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை, கோல இயல், மயிலாய் இருக்கும், இமயாசலத்திடை, வந்து உதித்த வெயிலாய் இருக்கும், விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம், கயிலாயருக்கு அன்று, இமவான் அளித்த கனங்குழையே.
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக் காத்தாளை, அங்குச பாசாங்குசமும், கரும்பும், அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு, ஒரு தீங்கு இல்லையே.